Saturday, December 19, 2009

மகள் பிறந்த செய்தி!



இல்வாழ்வில் ஒரு இனிய செய்தி!
இனிக்கும் கனிபோல்
இன்பம் சேர்த்த செய்தி!
நிலவின் ஒளியாய்;
வாழ்வின் தோழியாய்;
வந்த செய்தி!
மகள் பிறந்தாள் என்ற நற்செய்தி!

இருமுறை தவறவிட்ட செல்வம் இது!
இம்முறை தேடிவந்த மகிழ்ச்சி இது!
என் வண்ணமயில்
பெற்றெடுத்த பதுமை இவள்!
ராமர் நட்சத்திரத்தில் பிறந்த சீதை இவள்!

மருத்துவச்சி தன்கரம் கொண்டு
தொட்டேடுத்த பூச்செண்டு !
எடுக்கும்போது இவள்:
குண்டு மில்லி, ரோஜா நிறம்;
பஞ்சு கண்ணம், பிஞ்சு உடல்;
நீண்ட விரல்;
என மகிழ்ச்சியின்
மொத்த குத்தகையானாள்!

ஈன்றவள் இவள் முகம்கண்ட நொடி;
வித்திட்ட நான் இவளை விழித்தபடி;
நல்வாழ்வின் காவியத்தில்
வசந்தத்தின் முதல்படி அடைந்தோம்!

எங்கள் நினைவெல்லாம்
இனி வரும் தருணம் எல்லாம்
இவள் இடும் கட்டளைகள் ஆகும் !
இதை உங்களோடு
பகிர்வதில் என் மகிழ்ச்சி
பன்மடங்கு பெருக வகைசெய்யும்!

என்ன
பெயர்? என்ன பெயர்?
என கேட்பவர்க்கெல்லாம்
"மதிமித்ரா" என்ற பெயர் பதிலாகும்!
"நிலவின் தோழி" என்று பொருளாகும்!
- ஒளிச்சுடர்

1 comments:

Laksha said...

Said very well, thought you as a good artist then as a good designer, seeing you as a good poet as well..keep rocking....senthil, your pateince would get you the heights of success...All the best... Convey my heartiest wishes to Mathimitra

Post a Comment